உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

கந்தர்வக்கோட்டையில் நாளை மின்தடை

Published On 2022-02-24 06:25 GMT   |   Update On 2022-02-24 06:25 GMT
கந்தர்வக்கோட்டை பகுதியில் நாளை மின் விநியோகம் இருக்காது.
புதுக்கோட்டை:

கந்தர்வக்கோட்டை பகுதியில் உள்ள  ஆதனக்கோட்டை, புதுப்பட்டி,  பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை 25&ந்தேதி   மாதாந்திரமின் பராமரிப்பு பணிகள் நடை பெற இருப்பதால் இந்த துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும்

ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டகுலம், மணவிடுதி, சொக்கநாதபட்டி, சோத்துப் பாளை,  மாந்தாங்குடி, காட்டு நாவல், மட்டயன்பட்டி,  

மங்களத்துபட்டி, கந்தர்வகோட்டை,  அக்கச்சிபட்டி, வளவம்பட்டி, கல்லாக்கோட்டை, மட்டங்கால், வேம்பன்பட்டி,   சிவன்தான் பட்டி, வீரடிபட்டி, புதுப்பட்டி,  நம்புரான் பட்டி, மோகனூர், பல்லவராயன்பட்டி, அரவம்பட்டி,

மங்கனூர்,  வடுகப்பட்டி, பிசானத்தூர்,  துருசுபட்டி, மெய்குடி பட்டி, வெள்ளாள விடுதி, சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு  காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இத்தகவலை  கந்தர்வகோட்டை மின்வாரிய உதவிசெயற்பொறியாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News