உள்ளூர் செய்திகள்
மயங்கி விழுந்து இறந்த மூதாட்டி

அரசு ஆஸ்பத்திரியில் மூதாட்டி சாவு

Published On 2022-02-24 06:24 GMT   |   Update On 2022-02-24 06:24 GMT
அரசு ஆஸ்பத்திரியில் மூதாட்டி சாவு குறித்து போலீசார் போலீசார் விசாரணை நடதிதினர்.
சேலம்:

சேலம் ராஜகாளியம்மன் கோவில் பகுதியில் கடந்த 16-ந்தேதி 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மயக்கம் அடைந்து உயிருக்கு போராடினர். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார். இறந்த மூதாட்டியின் வலது கண் அருகில் மச்சம் மற்றும் வலது கையில் காயதழும்பு உள்ளது.

 இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News