உள்ளூர் செய்திகள்
தேவூர் அருகே விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது
சங்ககிரி:
தேவூர் அருகே சின்னாகவுண்டனூர் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பண்ணைப்பள்ளி என்ற பெயரில் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் விவசாயிகளுக்கு அடி உரம் மற்றும் இலை வழியாக உரமிடுதல் குறித்த தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் பயிற்சி வகுப்பில் குமரகுரு வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு நிலக்கடலையில் நச்சுயிரி முறிவு விதிமுறைகள், நோய் அறிகுறிகள் மற்றும் கட்டுபடுத்தும் முறைகளை செயல் விளக்கமாக எடுத்து கூறினார்கள். பயிற்சி வகுப்புக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.