உள்ளூர் செய்திகள்
மரணம்

திருவள்ளூர் அருகே தென்னை மரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி பலி

Published On 2022-02-24 06:11 GMT   |   Update On 2022-02-24 06:11 GMT
திருவள்ளூர் அருகே தென்னை மரத்தில் இருந்து கால் தவறி விழுந்ததில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த கைவண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது50). கூலித் தொழிலாளி. இவர் அதிகத்தூர் கிராமத்தில் உள்ள தென்னை மரத்தில் ஏறினார். அப்போது கால் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த மணிவண்ணனை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மணிவண்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News