உள்ளூர் செய்திகள்
போதை ஆசாமிகளால் சூறையாடப்பட்ட தென்னந்தோப்பு

குடிபோதையில் தென்னந்தோப்பு சூறை

Published On 2022-02-23 09:18 GMT   |   Update On 2022-02-23 09:18 GMT
திண்டுக்கல் அருகே தென்னந்தோப்பை சூறையாடிய கும்பல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது
வடமதுரை:

வடமதுரை அருகே உள்ள புத்தூர் பிச்சம்பட்டியைச் சேர்ந்தவர் கர்ணன் (வயது 35) விவசாயி. இவர் சொந்தமாக தென்னந்தோப்புகளை வைத்து பராமரித்து வருகிறார். இந்த தோப்பில் அடிக்கடி அதே பகுதியைச் சேர்ந்த சிலர் மது குடிக்கும் இடமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

மேலும் தோட்டத்தில் குளித்து விட்டு மரத்தில் உள்ள தேங்காய்களை யும் பறித்து சென்றனர். இதனை கர்ணன் கண்டித்துள்ளார். எனவே ஆத்திரமடைந்த போதை கும்பல் தென்னை மரத்தை வெட்டி சேதப்படுத்தியதுடன் மோட்டார் அறையையும் அடித்து நொறுக்கினர். ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.

இதுகுறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News