உள்ளூர் செய்திகள்
பொன்னமராவதி அருகே சிறுதானிய உணவுத்திருவிழா நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமாராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் சிறுதானிய உணவு போட்டி மற்றும் உணவுத்திருவிழா நடந்தது.
கண்டியாநத்தம் ஊராட்சி மகளிர் குழுக் கூட்டமைப்பு சார்பில் மகளிர் குழு பெண்களுக்கு மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் சிறுதானிய உணவு தயாரித்து அதில் சிறந்ததை தேர்வு செய்யும் போட்டி நடத்தப்பட்டது.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் சுபத்ரா, ஆசிரியர் கீதா, அங்கன்வாடி பணியாளர் ராசாத்தி ஆகியோர் நடுவர்களாக இருந்து சிறுதானியம் மூலம் தயாரிக்கப்பட்டவர்களிடம் உணவு மகிமை அதன் பயன் குறித்தும் விளக்கம் பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து இதில் மூன்று பேர் சிறந்த சிறுதானிய உணவு தயாரித்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் ஊராட்சித்தலைவர் செல்வி முருகேசன், ஆசிரியர்கள் சத்யா, கலைவாணி, ஊராட்சி செயலாளர் அழகப்பன், குழு கூட்டமைப்பு நிர்வாகிகள் ஜோதிமணி அழகம்மாள், சாந்தகுமாரி, சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.