உள்ளூர் செய்திகள்
புதுக்கோட்டை நகராட்சியில் தி.மு.க. வெற்றி
புதுக்கோட்டையில் அதிக இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத் தில் புதுக்கோட்டை நகராட் சியில் 42 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. அ.தி.மு.க. பா.ஜ.க. தே.மு.தி.க. மக்கள் நீதி மய்யம், பா.ம.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 282 பேர் போட்டியிடுகின்றனர்.
இதே போல அறந்தாங்கி நகராட்சியில் 27 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு 128 பேர் களத்தில் உள்ளனர், ஆலங்குடி, அன்னவாசல், அரிமளம், கறம்பக்குடி, கீரனூர், பொன்னமராவதி ஆகிய 6 பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகளில்கவுன் சிலர் பதவிக்கும் இலுப்பூர், கீரமங்கலம் ஆகிய பேரூராட்சியில் தலா 14 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கும் மொத்தம் 492 பேர் போட்டியிடுகின்றனர்.
இதற்காக 278 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு, கடந்த 19 ந் தேதி வாக்கு பதிவு நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதில் புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 27 இடங்களிலும், அ.தி.மு.க. 8 இடங்களிலும், சுயேட்சைகள் 6 இடங்களிலும், அ.ம.மு.க. 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
இதில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. புதுக்கோட்டை நகராட்சியை கைப்பற்றியுள்ளது.
இதே போல் அறந்தாங்கி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் அதிக இடங்களில் தி.மு.க.வெற்றி பெற்று நகராட்சியை கைப்பற்றி உள்ளது.
6 பேரூராட்சிகளில் அன்னவாசல் தவிர மற்ற 5 பேரூராட்சிகளில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத் தில் புதுக்கோட்டை நகராட் சியில் 42 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. அ.தி.மு.க. பா.ஜ.க. தே.மு.தி.க. மக்கள் நீதி மய்யம், பா.ம.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 282 பேர் போட்டியிடுகின்றனர்.
இதே போல அறந்தாங்கி நகராட்சியில் 27 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு 128 பேர் களத்தில் உள்ளனர், ஆலங்குடி, அன்னவாசல், அரிமளம், கறம்பக்குடி, கீரனூர், பொன்னமராவதி ஆகிய 6 பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகளில்கவுன் சிலர் பதவிக்கும் இலுப்பூர், கீரமங்கலம் ஆகிய பேரூராட்சியில் தலா 14 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கும் மொத்தம் 492 பேர் போட்டியிடுகின்றனர்.
இதற்காக 278 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு, கடந்த 19 ந் தேதி வாக்கு பதிவு நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதில் புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 27 இடங்களிலும், அ.தி.மு.க. 8 இடங்களிலும், சுயேட்சைகள் 6 இடங்களிலும், அ.ம.மு.க. 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
இதில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. புதுக்கோட்டை நகராட்சியை கைப்பற்றியுள்ளது.
இதே போல் அறந்தாங்கி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் அதிக இடங்களில் தி.மு.க.வெற்றி பெற்று நகராட்சியை கைப்பற்றி உள்ளது.
6 பேரூராட்சிகளில் அன்னவாசல் தவிர மற்ற 5 பேரூராட்சிகளில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.