உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

சட்டக்கல்லூரி இயங்க நடவடிக்கை திமுக வலியுறுத்தல்

Published On 2022-02-22 07:50 GMT   |   Update On 2022-02-22 07:50 GMT
பேராசிரியர்களை நியமித்து சட்ட கல்லூரி இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி:

புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசு சட்டக் கல்லூரியில் 10 ஆண்டுக்கும் மேலாக கல்லூரி முதல்வர் உள்ளிட்ட  சட்டம் தொடர்பான படிப்புகளை கற்றுத் தரக்கூடிய மொத்தமுள்ள 18 பேராசிரியர் பணியிடங்களில் 10-ம், சட்டம் சாராத படிப்புகளை கற்றுத்தரக்கூடிய 4 பேராசி ரியர் பணியிடங்களில் 3-ம் காலியாக உள்ளது. 

பொது நல வழக்கில் பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் புதுவை பல்கலைக்கழகமும் காலியாக உள்ள கல்லூரி முதல்வர், பேராசிரியர் பணியிடங்களை நிரப்பி விட்டு மாணவர் சேர்க்கையை நிரப்ப உத்தரவிட்டிருந்தது.  

ஆனால் புதுவை அரசு, சட்ட கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கம் போல் சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்தியது. 

கடந்த 9-ந் தேதிக்கு முன்பு 3 ஆண்டு சட்ட படிப்பில் 37 மாணவர்களையும், 5 ஆண்டு சட்டப்படிப்பில் 30 மாணவர்களையும் கல்லூரி சேர்த்துள்ளது.  பல்கலைக்கழகம் 9-ந் தேதி முதலாம் ஆண்டு சேர்க்கையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. 

இதனால் சட்டக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. கவர்னர், முதல்-அமைச்சர் இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு ஏதேனும் ஒரு வகையில் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பியும்,  நூலகம், பஸ் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தியும், கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாத வகையில் தொடர்ந்து கல்லூரி இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News