உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

பெற்றோருக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல்கூறி காதலனை திருமணம் செய்த கல்லூரி மாணவி

Published On 2022-02-22 08:34 IST   |   Update On 2022-02-22 08:34:00 IST
பெற்றோருக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல்கூறி காதலனை கல்லூரி மாணவி திருமணம் செய்தார்.
நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள பாவட்டக்குடி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த அப்துல் ரவுப் மகள் நூருல் இர்பன் (வயது 20). 

இவர் மயிலாடுதுறை கல்லூரியில் தமிழ் பாடப்பிரிவில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் கடந்த 17-ம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.

நூரு ல் இர்பான் தனது தந்தைக்கு வாட்ஸ்அப் மூலமாக தன்னுடன் பயிலும் மேல்பாதியை சேர்ந்த சேதுராமன் என்பவரை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்திருந்தார். 

இதையடுத்து முகமதுராவுப் பேரளம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க போலீசார் வழக்குப்பதிவு செய்து நூருல்இர்பன் தேடி வருகின்றனர்.

Similar News