உள்ளூர் செய்திகள்
திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

இலுப்பூர் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-02-22 02:52 GMT   |   Update On 2022-02-22 02:52 GMT
கீழ்வேளூர் அருகே இலுப்பூர் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த இலுப்பூரில் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 19-ந்தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன், கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றது.

நான்காம் கால யாகசாலை பூஜைக்குப்பின் திரவுபதை அம்மன், அய்யனார் பச்சை முத்து மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
Tags:    

Similar News