உள்ளூர் செய்திகள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை 54 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 பேரூராட்சிகளில் கடந்த 19 -ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் 1,17,551 வாக்காளர்கள் வாக்களித்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் வடக்கனந்தல், சங்கராபுரம், தியாகதுருகம், சின்னசேலம், மணலூர்பேட்டை ஆகிய 5 பேரூராட்சிகளில் கடந்த 19 -ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் 1,17,551 வாக்காளர்கள் வாக்களித்தனர்.
கள்ளக்குறிச்சி நகராட்சி மற்றும் சங்கராபுரம் பேரூராட்சி வாக்குகள் கள்ளக்குறிச்சி அருகே தச்சூர் பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரி, உளுந்தூர்பேட்டை நகராட்சி மற்றும் தியாக துருகம் பேரூராட்சி வாக்குகள் உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சின்னசேலம் மற்றும் வடக்கநந்தல் பேரூராட்சி வாக்குகள் கள்ளக்குறிச்சி அருகே மேலூர் டி.எஸ்.எம். ஜெயின் பொறியியல் கல்லூரி, திருக்கோவிலூர் நகராட்சி மற்றும் மணலூர்பேட்டை பேரூராட்சி வாக்குகள் திருக்கோவிலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய இடங்களில் எண்ணப்படுகிறது. நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
கள்ளக்குறிச்சி நகராட்சி வாக்குகள் 8 மேஜைகளில் 6 சுற்றுகளாகவும், திருக்கோவிலூர் நகராட்சி வாக்குகள் 3 மேஜைகளில் 9சுற்றுகளாகவும், உளுந்தூர்பேட்டை நகராட்சி வாக்குகள் 3 மேஜைகளில் 8 சுற்றுகளாகவும், வடக்கனந்தல் பேரூராட்சி வாக்குகள் 3 மேஜைகளில் 4 சுற்றுகளாகவும், சங்கராபுரம் பேரூராட்சி வாக்குகள் 4 மேஜைகளில் 3 சுற்றுகளாகவும், தியாகதுருகம் பேரூராட்சி வாக்குகள் 2 மேஜைகளில் 10 சுற்றுகளாகவும், சின்ன சேலம் பேரூராட்சி வாக்குகள் 3 மேஜைகளில் 6 சுற்றுகளாகவும், மணலூர் பேட்டை பேரூராட்சி வாக்குகள் 2 சுற்றுகள் எண்ணப்படுகிறது.
ஆக மொத்தம் 185 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 28 மேஜைகளில் 54 சுற்றுகளாக எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அனைத்தும் நாளை மதியத்திற்குள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் வடக்கனந்தல், சங்கராபுரம், தியாகதுருகம், சின்னசேலம், மணலூர்பேட்டை ஆகிய 5 பேரூராட்சிகளில் கடந்த 19 -ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் 1,17,551 வாக்காளர்கள் வாக்களித்தனர்.
கள்ளக்குறிச்சி நகராட்சி மற்றும் சங்கராபுரம் பேரூராட்சி வாக்குகள் கள்ளக்குறிச்சி அருகே தச்சூர் பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரி, உளுந்தூர்பேட்டை நகராட்சி மற்றும் தியாக துருகம் பேரூராட்சி வாக்குகள் உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சின்னசேலம் மற்றும் வடக்கநந்தல் பேரூராட்சி வாக்குகள் கள்ளக்குறிச்சி அருகே மேலூர் டி.எஸ்.எம். ஜெயின் பொறியியல் கல்லூரி, திருக்கோவிலூர் நகராட்சி மற்றும் மணலூர்பேட்டை பேரூராட்சி வாக்குகள் திருக்கோவிலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய இடங்களில் எண்ணப்படுகிறது. நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
கள்ளக்குறிச்சி நகராட்சி வாக்குகள் 8 மேஜைகளில் 6 சுற்றுகளாகவும், திருக்கோவிலூர் நகராட்சி வாக்குகள் 3 மேஜைகளில் 9சுற்றுகளாகவும், உளுந்தூர்பேட்டை நகராட்சி வாக்குகள் 3 மேஜைகளில் 8 சுற்றுகளாகவும், வடக்கனந்தல் பேரூராட்சி வாக்குகள் 3 மேஜைகளில் 4 சுற்றுகளாகவும், சங்கராபுரம் பேரூராட்சி வாக்குகள் 4 மேஜைகளில் 3 சுற்றுகளாகவும், தியாகதுருகம் பேரூராட்சி வாக்குகள் 2 மேஜைகளில் 10 சுற்றுகளாகவும், சின்ன சேலம் பேரூராட்சி வாக்குகள் 3 மேஜைகளில் 6 சுற்றுகளாகவும், மணலூர் பேட்டை பேரூராட்சி வாக்குகள் 2 சுற்றுகள் எண்ணப்படுகிறது.
ஆக மொத்தம் 185 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 28 மேஜைகளில் 54 சுற்றுகளாக எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அனைத்தும் நாளை மதியத்திற்குள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.