உள்ளூர் செய்திகள்
மரணம்

நீர் வீழ்ச்சியில் மூழ்கி மெக்கானிக் பலி

Published On 2022-02-21 15:27 IST   |   Update On 2022-02-21 15:27:00 IST
சங்கராபுரத்தில் நண்பர்களுடன் குளிக்க சென்ற போது நீர் வீழ்ச்சியில் மூழ்கி மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார்.
சங்கராபுரம்:

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அப்துல் சத்தார். அவரது மகன் முகம்மது இஸ்மாயில் (வயது28). ஆட்டோ மொபைல் மெக்கானிக். இவர் சம்பவத்தன்று நண்பர்கள் 6 பேருடன் கல்வராயன் மலையை சுற்றிப்பார்க்க சென்றார்.

அப்போது சங்கராபுரம் அருகே உள்ள கொடியனூர் மலை பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் அவர்கள் குளித்தனர். இதில் முகமது இஸ்மாயில் பாறையில் கால் வழுக்கியதால் தவறி கீழே தண்ணீர் தேங்கிய பகுதியில் விழுந்து நீரில் மூழ்கினார். நீண்ட நேரமாகியும் அவரை காணாததால் தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் தீ யணைப்பு துறையினர் தேடினர்.

அப்போது நீர் வீழ்ச்சியில் முகமது இஸ்மாயில் உடலை தேடி கண்டுபிடித்தனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வட பொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News