உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

சரவணம்பட்டியில் வியாபாரி வீட்டில் 19 பவுன் நகை கொள்ளை

Published On 2022-02-21 09:26 GMT   |   Update On 2022-02-21 09:26 GMT
பீரோவில் இருந்தநகைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.
கோவை:

கோவை விளாங்குறிச்சி திருநகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் அந்தோணி ரூபன் (வயது 51). கண் காண்ணாடி வியாபாரி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு அலுவலகத்துக்கு சென்றார். 

அப்போது அந்தோணி ரூபன் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், ஆரம் உள்பட 19 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.வீட்டிற்கு திரும்பிய அந்தோணி ரூபன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்தநகைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. 

இது குறித்து அவர் சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை புதிவு செய்தனர். இதனை வைத்து சரவணம்பட்டி போலீசார் கண்ணாடி வியாபாரி வீட்டின் கதவை உடைத்து 19 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

Tags:    

Similar News