உள்ளூர் செய்திகள்
விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
வேதாரண்யம் பகுதி விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள அச்சம் தீர்த்த விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
பின்பு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதணை நடைபெற்றது. இதில் பக்தர்கள் அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டனர்.
இதுபோல் வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள கற்பக விநாயகர், கட்சுவான் முனிஸ்வரர் சுவாமி கோவில் விநாயகர், இலக்கு அறிவித்த விநாயகர், சேதுசாலையில் உள்ள சித்தி விநாயகர், மண்டபகுளம் கரையில் உள்ள சங்கடம் தீர்த்த விநாயகர், குரவப்புலம் சித்தி அரசு விநாயகர், நாட்டு மடம் மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள விநாயகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.