உள்ளூர் செய்திகள்
பெரம்பலூரில் எண்ணெய் வியாபாரி வீட்டில் ரூ.10 லட்சம் நகை கொள்ளை
பெரம்பலூரில் எண்ணெய் வியாபாரி வீட்டில் யாரும் இல்லாததை தொடர்ந்து நோட்டமிட்டு மர்மநபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் டவுன் பகுதி மேற்கு அபிராமபுரம் பொன்னுசாமி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 59). இவர் சமையல் எண்ணெய் டீலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவியும் பரணிதரன், கார்த்தி, சபரி ஆகிய மூன்று மகன்களும் உள்ளனர்.
இதில் மூத்த மகன் பரணிதரன் சென்னையில் உள்ளார். கார்த்திக் வெளிநாட்டிலும் சபரி பெங்களூரிலும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி ரவிச்சந்திரனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது மனைவியுடன் சென்னையில் உள்ள பரணிதரன் வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர் அவர்கள் நேற்று இரவு மீண்டும் பெரம்பலூர் திரும்பினர். அப்போது சுற்றுச்சுவர் கதவை திறந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு பூட்டு இல்லாமல் திறந்து கிடந்ததை பார்த்து ரவிச்சந்திரன் அதிர்ச்சி அடைந்தார்.
பதட்டத்துடன் உள்ளே சென்று பார்த்த போது பெட்ரூமில் உள்ள அலமாரியில் வைத்திருந்த வைரத்தோடு, தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், பணம் மற்றும் செல்போன் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதில் 1 ஜோடி வைரத்தோடு, 2 ஜோடி கல் தோடு, ஒரு டாலர், 2 ஜோடி முத்து தோடு, 6 ஜோடி தோடு, 1 கல் டாலர், 4 மோதிரம், 5 கிலோ வெள்ளி பொருட்கள், 2 செல்போன், பணம் ரொக்கம் ரூ.5 ஆயிரம் ஆகும்.
இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோப்பநாய் மற்றும் கைரேகை, தடய அறிவியல் நிபுணர்கள் சென்று ஆய்வு செய்தனர். மேலும் மேலும் கொள்ளை சம்பவம் தொடர் பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றனர்.
வீட்டில் யாரும் இல்லாததை தொடர்ந்து நோட்டமிட்டு வந்த மர்மநபர்கள் தான் இந்த கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர். இச்சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் டவுன் பகுதி மேற்கு அபிராமபுரம் பொன்னுசாமி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 59). இவர் சமையல் எண்ணெய் டீலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவியும் பரணிதரன், கார்த்தி, சபரி ஆகிய மூன்று மகன்களும் உள்ளனர்.
இதில் மூத்த மகன் பரணிதரன் சென்னையில் உள்ளார். கார்த்திக் வெளிநாட்டிலும் சபரி பெங்களூரிலும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி ரவிச்சந்திரனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது மனைவியுடன் சென்னையில் உள்ள பரணிதரன் வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர் அவர்கள் நேற்று இரவு மீண்டும் பெரம்பலூர் திரும்பினர். அப்போது சுற்றுச்சுவர் கதவை திறந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு பூட்டு இல்லாமல் திறந்து கிடந்ததை பார்த்து ரவிச்சந்திரன் அதிர்ச்சி அடைந்தார்.
பதட்டத்துடன் உள்ளே சென்று பார்த்த போது பெட்ரூமில் உள்ள அலமாரியில் வைத்திருந்த வைரத்தோடு, தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், பணம் மற்றும் செல்போன் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதில் 1 ஜோடி வைரத்தோடு, 2 ஜோடி கல் தோடு, ஒரு டாலர், 2 ஜோடி முத்து தோடு, 6 ஜோடி தோடு, 1 கல் டாலர், 4 மோதிரம், 5 கிலோ வெள்ளி பொருட்கள், 2 செல்போன், பணம் ரொக்கம் ரூ.5 ஆயிரம் ஆகும்.
இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோப்பநாய் மற்றும் கைரேகை, தடய அறிவியல் நிபுணர்கள் சென்று ஆய்வு செய்தனர். மேலும் மேலும் கொள்ளை சம்பவம் தொடர் பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றனர்.
வீட்டில் யாரும் இல்லாததை தொடர்ந்து நோட்டமிட்டு வந்த மர்மநபர்கள் தான் இந்த கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர். இச்சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.