உள்ளூர் செய்திகள்
தாய் இறந்த சோகத்தில் மகன் விஷம் குடித்து தற்கொலை
வேதாரண்யத்தில் தாய் இறந்த சோகத்தில் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூர் சர்வகட்டளை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் (வயது 51) விவசாயி. இவரது தாயார் கமலாம்பாள் (80) கடந்த 15 நாட்களுக்கு முன்பு இறந்தார்.
அவரது படத்திறப்பு நடந்து முடிந்தது. இந்நிலையில் தாயார் இறந்த சோகத்தில் இருந்த நாகராஜன் துக்கம் தாங்காமல் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜன் இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்& இன்ஸ்பெகட்ர் தேவசேனாதிபதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.