உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

5 ம் வகுப்பு மாணவர் தற்கொலை

Published On 2022-02-17 15:28 IST   |   Update On 2022-02-17 15:28:00 IST
மாணவர் தற்கொலை சம்பவத்தில் போலீசார் விசாரணை
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் மகன் ஸ்ரீசந்து (வயது 11) இவர் அங்குள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 5&ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் சம்வத்தன்று மாலை பள்ளி முடிந்த பின்னர் வயலுக்கு சென்று, அங்கு வேலை செய்து கொண்டிருந்த தனது தந்தையிடம் ஸ்ரீசந்து வீட்டு சாவியை பெற்றுக் கொண்டு சென்றுள்ளார்.

வயலில் வேலையை முடித்து விட்டு இரவு வீட்டுக்குச் சென்ற ஜெய்சங்கர் வீடு உள்பக்கமாக பூட்டியிருப்பதை பார்த்தார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஸ்ரீசந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

தகவலறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று மாணவரின் உடலை மீட்டு மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் மேலும் சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். 

Similar News