உள்ளூர் செய்திகள்
நன்னிலம் அருகே வாலிபரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள மகிழஞ்சேரி குளக்கரை தெருவில், மகிழஞ்சேரி கீழத் தெருவை சேர்ந்தவர் மோகன் மகள் அபிராமி. இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுக்கப்பட்டது. இவர் கணவரோடு, ஓராண்டு மட்டும் குடும்பம் நடத்திவிட்டு, பின்னர் மகிழஞ்சேரி கிராமத்தில் வந்து இருந்து வருகிறார்.
இந்நிலையில் திருமணத்திற்கு முன்பாக மகிழஞ்சேரி கீழக்குடி ஆன தெருவை சேர்ந்த பாண்டியன் மகன் ராஜா என்பவரை விரும்பியதாக தெரியவந்தது. அதனால் தனது கணவரோடு வாழாமல், பிரிந்து வந்ததாக தெரிய வருகிறது. இந்நிலையில், இதனைப் பற்றி பேச ராஜாவை, அபிராமியின் சகோதரன் மணிகண்டன், அவரது பெரியப்பா மகன் வினோத், குளத்து கரை தெருவில் அழைத்துப் பேசும்போது தகராறு ஏற்பட்டது.
இதில் ராஜாவின் அண்ணன் சரவணனும், ராஜாவும் வினோத்தை பீர் பாட்டிலால் தாக்கியுள்ளார். அப்பொழுது சீனிவாசன் என்பவர் வினோத்தை ஓடவிடாமல் பிடித்துக் கொண்டதாகவும், தடுக்க வந்த மணிகண்டனை மூவரும் சேர்ந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
காயமடைந்த மணிகண்டன், வினோத் ஆகிய இருவரும், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர். அடைத்தனர். ராஜா மற்றும் சரவணனை தேடி வருகின்றனர்.