உள்ளூர் செய்திகள் (District)
கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு

பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி

Published On 2022-02-16 07:48 GMT   |   Update On 2022-02-16 07:48 GMT
பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது
பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் விவேகானந்தர் பிறந்த தினமான தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் விளையாட்டுப் போட்டியில் இவ்வாண்டு கால்பந்து போட்டி நடத்தப்பட்டது. 

14 வயதுக்குட் பட்டோருக்கான இந்த கால்பந்து போட்டியில் பட்டுக்கோட்டை ஒரத்தநாடு, தஞ்சாவூர், அதிராம்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 14 அணியினர் போட்டியிட்டனர். சர்வதேச விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்ட இந்த போட்டியில் நடுவர்களாக செல்லப்பாண்டியன், முத்துமாலை, ராஜகோபால், அப்துல்லா ஆகியோர் செயல்பட்டனர்.
 
கல்லூரி முதல்வர் சீனிவாசன் போட்டியைத் தொடங்கி வைத்தார்.  இந்த போட்டியில் ஒய்.பி.ஆர். ஒரத்தநாடு, ஒய்.பி.ஆர். 
தஞ்சாவூர், செல்லையா புட்பால் கிளப் ஆம்பலாப் பட்டு, பிக் டெம்பிள் பள்ளி ஒரத்தநாடு ஆகிய அணியினர் முறையே முதல் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காமிடத்தை பிடித்தனர். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி முதல்வர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
 
கலந்து கொண்ட அனைவரையும் கல்லூரியின் கணினி மேலாளர் பொன்னுசாமி வரவேற்றார். நாட்டுச்சாலை அரசினர் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியை அகிலா வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகளை வழங்கினார்.

நாட்டுச்சாலை இளநிலை பட்டதாரி ஆசிரியை லதா வாழ்த்துரை வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் ராஜமாணிக்கம் நன்றி கூறினார்.
Tags:    

Similar News