உள்ளூர் செய்திகள்
பாபநாசத்தில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
பாபநாசம் பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பாபநாசம்:
பாபநாசம் பேரூராட்சியில் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் மும்மரம் அடைந்துள்ளன.
பாபநாசம் பேரூராட் சியில் தபால் வாக்குகள் செலுத்து வதற்குரிய விண்ணப்பங்கள் தனித்தனியே அரசு ஊழியர்களுக்கு விரைவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
அஞ்சல் வாக்கு சீட்டினை அரசு ஊழியர்கள் ஓட்டு போடும் அஞ்சல் வாக்கு பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டு அலுவலகத்தில் வைக்கப்பட் டுள்ளது.
பாபநாசம் பேரூராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளில் வாக்குச் சாவடிகளுக்கு தேவையான பொருள்கள் பிரிக்கப்பட்டு வாக்குச்சாவடி வாரியாக எண்கள் எழுதப்பட்ட பைகளில் தனித்தனியாக எடுத்து வைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இப்பணியினை பாபநாசம் தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயன், மண்டல அலுவலர் பூங்குழலி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ரவிச்சந்திரன், சுந்தரேசன் ஆகியோர் மேற்கொண்டனர்.