உள்ளூர் செய்திகள்
கைது

சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவர் கைது

Published On 2022-02-15 19:16 IST   |   Update On 2022-02-15 19:16:00 IST
சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்:

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் ச. செல்லம்பட்டு பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த கருப்பன்(வயது 46) என்பவர் வீட்டின் அருகே லாரி ட்யூப்பில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து.100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Similar News