உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கொரோனாவுக்கு மூதாட்டி பலி

Published On 2022-02-15 14:32 IST   |   Update On 2022-02-15 14:32:00 IST
புதுவையில் கொரோனவுக்கு மூதாட்டி பலியாகியுள்ளார்.
புதுச்சேரி:


புதுவையில் ஆயிரத்து 971 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் புதிதாக 68 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 39, காரைக்காலில் 16, ஏனாமில் 8, மாகியில் 5 பேர் புதிதாக   தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

புதுவையில் 23, காரைக் காலில் 8, ஏனாமில் 1, மாகியில் 3 பேர் என 35 பேர் தொற்றுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

புதுவையில் 96, காரைக்காலில் 70, ஏனாமில் 22, மாகியில் 8 பேர் என 196 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். 

புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 363 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 504 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 

புதுவையில் 494, காரைக்காலில் 315,  ஏனாமில் 43, மாகியில் 13 பேர் என 865 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 900 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். புதுவை ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தார். 

இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 959 ஆக உயர்ந்துள்ளது. 

புதுவையில் 2-வது  தவணை உட்பட 15 லட்சத்து 57 ஆயிரத்து 738 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 
இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Similar News