உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பாளையில் மனைவியை சரமாரி வெட்டிய தொழிலாளி கைது

Published On 2022-02-14 09:24 GMT   |   Update On 2022-02-14 09:24 GMT
பாளை செந்தில்நகர் பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அரிவாளால் அவரை வெட்டினார்.
நெல்லை:

பாளை, செந்தில் நகர் பகுதியை சேர்ந்தவர் வீரமணிகண்டன் (வயது 30). இவரது மனைவி செல்வி (30).

கணவன்-மனைவிக்கு இடையே கடந்த சில மாதங்களாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த செல்வி கணவனை பிரிந்து கருங்குளத்தில் உள்ள தனது சகோதரர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

வீரமணிகண்டன் தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு பலமுறை அழைத்தும் அவர் வரவில்லை. இந்த நிலையில் செல்வி, கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.

நேற்று வீர மணிகண்டன் அந்த பெட்ரோல் பங்கிற்கு சென்று, மனைவியிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது ஆத்திரமடைந்த அவர் திடீரென்று அரிவாளால் செல்வியை சரமாரியாக வெட்டினார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவரை மீட்டு, நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சிவந்திப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இன்று வீரமணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News