உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

வனத்துறை பெண் ஊழியர் தற்கொலை

Published On 2022-02-14 13:53 IST   |   Update On 2022-02-14 13:53:00 IST
மகள் திருமணம் செய்துகொள்ளாத வேதனையில் வனத்துறை பெண் ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

புதுவை முத்துபிள்ளை பாளையம் புதுநகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி சங்கரிதேவி(வயது 47). கண்ணன் புதுவை வனத்துறையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். 

திடீரென அவர் இறந்து விட்டதால் கருணை அடிப்படையில் சங்கரிதேவிக்கு வனத்துறை யில் வேலை வழங்கப்பட்டது. சங்கரிதேவி மஸ்தூராக வேலை செய்து வந்தார்.

இவர்களுக்கு சரண்யா (27), சங்கீதா(25) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். சரண்யாவுக்கு திருமணமாகி அவரது கணவர் ஆனந்தன் பிரான்சில் வேலை பார்த்து வருகிறார். இதனால் சரண்யா தனது குழந்தைகளுடன் தாயார் சங்கரிதேவி வீட்டில் வசித்து வந்தார்.

இதற்கிடையே சங் கீதாவுக்கு திருமணம் செய்து வைக்க சங்கரிதேவி விரும்பினார். ஆனால் சங்கீதா திருமண செய்து கொள்ள மறுத்து விட்ட தாக கூறப்படுகிறது. இதனால் சங்கரிதேவி மன வருத்தத்தில் இருந்து வந்தார். அவருக்கு சரண்யா ஆறுதல் கூறி சிறிது காலம் கழித்து சங்கீதாவுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என தாயாரை சமாதானப்படுத்தி வந்தார்.

சரண்யா கடந்த ஒரு வாரமாக சிறுவந்தாடு அருகே நரசிங்கபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் குழந்கைகளுடன் இருந்து வந்தார். 

இந்தநிலையில் இளைய மகளுக்கு திருமணம் செய்து வைக்கமுடியவில்லையே என சங்கரிதேவி வேதனையடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.  இளையமகள் சங்கீதா வெளியே சென்றிருந்த நிலையில் வீட்டின் குளியல் அறையில் சங்கரிதேவி இரும்பு பைப்பில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சங்கரிதேவியை தூக்கில் இருந்து மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சங்கரிதேவி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது மூத்த மகள் சரண்யா கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News