உள்ளூர் செய்திகள்
வழக்கு பதிவு

கள்ளக்குறிச்சி நகராட்சி காங்கிரஸ் வேட்பாளர் மீது வழக்கு பதிவு

Published On 2022-02-12 10:36 IST   |   Update On 2022-02-12 10:36:00 IST
தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறியதாக கள்ளக்குறிச்சி போலீசார் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தேவராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மணிக்கூண்டு தெருவை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 43). இவர் கள்ளக்குறிச்சி நகராட்சியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 15- வது வார்டு வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இவர் கடந்த சில நாட்களாக பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வந்தார். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறியதாக கள்ளக்குறிச்சி போலீசார் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தேவராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News