உள்ளூர் செய்திகள்
வேதாரண்யத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு
வேதாரண்யத்தில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி 21 வார்டுகளுக்கான தேர்தல் வரும் 19ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வேதாரண்யம் நகரின் முக்கிய வீதிகளில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
இந்த கொடி அணிவகுப்பில் வேதாரண்யம் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுப்ரியா, நாகலெட்சுமி, செந்தில்குமார், கன்னிகா, அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் மலர்கொடி மற்றும் வேதாரண்யம் சரக போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர்கள், போலீசார், ஊர் காவல் படையினர் கலந்து கொண்டு கொடி அணிவகுப்பு நடத்தினர்.