உள்ளூர் செய்திகள்
கள்ளக்குறிச்சி அருகே வீட்டில் இருந்த பெண் திடீர் மாயம்
கள்ளக்குறிச்சி அருகே வீட்டில் இருந்த பெண் திடீரென மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே தச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 37). இவர் நேற்று வீட்டிலிருந்து கடைக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் இருந்த இவரது மனைவி பிரியா (20) என்பவரை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி தனது மனைவியை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் பிரியா கிடைக்கவில்லை.
இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார், போலீசார் வழக்கு பதிந்து பிரியா என்ன ஆனார்? எங்கு சென்றார்? கடத்தப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி அருகே தச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 37). இவர் நேற்று வீட்டிலிருந்து கடைக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் இருந்த இவரது மனைவி பிரியா (20) என்பவரை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி தனது மனைவியை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் பிரியா கிடைக்கவில்லை.
இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார், போலீசார் வழக்கு பதிந்து பிரியா என்ன ஆனார்? எங்கு சென்றார்? கடத்தப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.