உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

மோட்டார் சைக்கிள் மோதி கண்டக்டர் பலி

Published On 2022-02-09 12:02 IST   |   Update On 2022-02-09 12:02:00 IST
திருப்பூண்டியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் கண்டக்டர் பலியானார்.
நாகப்பட்டினம்:

திருப்பூண்டி காரை நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று பணியை முடித்து வீட்டிற்கு செல்வதற்காக காரைநகர் ஈ.சி.ஆர் சாலையை கடக்க முயன்ற போது மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்தார்.

அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் இறந்தார்.

இதுகுறித்து செந்தில்குமார் மனைவி கபிலா அளித்த புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த மகிழி தெற்குத் தெருவை சேர்ந்த மதியழகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News