உள்ளூர் செய்திகள்
மிரட்டல்

கள்ளக்குறிச்சியில் மாமனாருக்கு கொலை மிரட்டல் விடுத்த மருமகன் மீது வழக்குபதிவு

Published On 2022-02-07 16:32 IST   |   Update On 2022-02-07 16:32:00 IST
கள்ளக்குறிச்சியில் மாமனாருக்கு கொலை மிரட்டல் விடுத்த மருமகன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே வானவரெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 53). இவரது மகள் பரமேஸ்வரி என்பவரும் இதே பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை மகன் பார்த்திபன் என்பவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பரமேஸ்வரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து விசாரணைக்காக ஆறுமுகம் போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது போலீஸ் நிலையம் அருகே நின்றுகொண்டிருந்த பார்த்திபன், இவரது தந்தை அண்ணாமலை, தாய் கிருஷ்ணவேணி, அண்ணன் பாரதிதாசன் ஆகியோர் கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் மருமகன் பார்த்திபன், மற்றும் அண்ணாமலை, கிருஷ்ண வேணி, பாரதிதாசன் ஆகிய 4 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News