உள்ளூர் செய்திகள்
வடபாதி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
சீர்காழி அருகே வடபாதி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா வருகிற 11-ந்தேதி நடக்கிறது
சீர்காழி:
சீர்காழி அருகே வடபாதி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் பத்து நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு உத்ஸவம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாள்தோறும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்று இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெறுகிறது. நேற்று 5&ம் நாள் திருவிழாவாக பிடாரி வடக்கு வீதி பகுதி பக்தர்கள், பொதுமக்களால் சிறப்பு மண்டகப்படி வழிபாடு நடந்தது.
சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இரவில் அம்மன் மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் புஷ்ப அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் வெள்ளிக்கிழமை தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.