உள்ளூர் செய்திகள்
இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி நிறுவன தலைவர் பிறந்த நாள் விழா
நாகையில் நடைபெற்ற இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி நிறுவன தலைவர் பிறந்த நாள் விழாவில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்வி நிறுவனத்தின் தலைவர் ஜி.எஸ்.ஜோதிமணி அம்மாள் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
முதலில் கல்லூரி வளாகத்தில் உள்ள தாளாளர் மறைந்த செவலியர் டாக்டர் ஜி.எஸ் பிள்ளை சிலைக்கு மலர்தூவி மாலை அணிவிக்கப்பட்டது.
தொடர்ந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.
மேலும் வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார். அனைவருக்கு இனிப்பு வழங்கப்பட்டது. கோவில்களில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டது.
விழாவில் கல்லூரி செயலர் டாக்டர் செவலியர் எஸ்.பரமேஸ்வரன், அறக்கட்டளை உறுப்பினர் அருள்பிரகாஷம், கோவிந்தசாமி, சங்கர் கணேஷ், கல்லூரி இயக்குநர் சுமதி பரமேஸ்வரன், கமலா ஸ்ரீ கோவிந்தசாமி, ராஜீபிரதீப் (எ) வினோத், சுப்ரமணியன் விஜய் மணிகண்டன், நிலா, செல்வி.சுப்ரஜா மற்றும் முதன்மை செயல் அலுவலர் முனைவர் சந்திரசேகர், இயக்குநர் விஜயசுந்தரம், தேர்வு நெறியாளர் முனைவர் சின்னத்துரை,
முனைவர் செல்வசந்திரா கல்லூரி முதல்வர் முனைவர் ராமபாலன் மற்றும் துணை முதல்வர் முனைவர் மோகன் மற்றும் அனைத்து கல்லூரி முதல்வர்கள், துணை முதல்வர்கள், துறை தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும்
பணியாளர்கள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சிவராமகிருஷ்ணன் மற்றும் பரத், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.