உள்ளூர் செய்திகள்
மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிள் திருடி செல்லும் காட்சி.

மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்மநபர்கள்

Published On 2022-02-07 13:11 IST   |   Update On 2022-02-07 13:11:00 IST
நாகை அருகே மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள பிரதாப ராமபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டிற்கு முன் நிறுத்தியிருந்தார்.
 
காலையில் பார்த்தபோது அதனை காணவில்லையாம். 2 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது அருகில் இருந்த சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகியிருந்தது.
 
இதுபற்றி அவர் கீழையூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதேபோல இன்று அதிகாலை 3 மணி அளவில் பரவை காய்கறி சந்தைக்கு சென்ற தெற்கு பொய்கை நல்லூர் ஷரிப்முகமது என்பவரை கத்தி முனையில் 3 இளைஞர்கள் மிரட்டி இருசக்கர வாகனத்தை பறித்து சென்றனர்.
 
நாகை வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து இதுபோன்று இருசக்கர வாகனம், ஆடுகள் மற்றும் செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

Similar News