உள்ளூர் செய்திகள்
லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்.

அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரிகள் சிறைபிடிப்பு

Published On 2022-02-07 11:42 IST   |   Update On 2022-02-07 11:42:00 IST
அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
அரியலூர்:
 
அரியலூர் அருகேயுள்ள கடுகூர் கிராமத்தில், அதிக பாரம் ஏற்றிக் கொண்டு வேகமாக சென்ற லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அயன்ஆத்தூர் கிராமத்தில் அரசு சிமென்ட் ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கம் உள்ளது. இங்கிருந்து லாரிகள் மூலம் சுண்ணாம்புக்கல் ஏற்றப்பட்டு  அரியலூரிலுள்ள சிமென்ட் ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

இந்த லாரிகள் கடுகூர் வழியாக விபத்தை ஏற்படுத்தும் வகையில், அதிக பாரத்துடன் சுண்ணாம்புக் கல் ஏற்றிக் கொண்டு அதிவேகமாக சென்றுள்ளது.

இதை கவனித்த கிராமமக்கள், அந்த வழியாக சென்ற லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த கயர்லாபாத் காவல் துறையினர்,

அதிக பாரம் ஏற்றிக் கொண்டு அதிக வேகமாக லாரிகளை இயக்கி வரும் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில், பொது மக்கள் லாரிகளை விடுவித்தனர்.

Similar News