உள்ளூர் செய்திகள்
காரைக்காலில் மாமியாரை பார்க்க சென்ற மருமகனுக்கு கத்திக்குத்து
காரைக்காலில் மாமியாரை பார்க்க சென்ற மருமகன் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:
காரைக்கால் கும்ச கட்டளையை சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது 36). இவரது மாமியார் அல்போன்ஸ்மேரி. இவர் காரைக்கால் தருமபுரம் பர்மாதெருவில் வசித்து வருகிறார்.
இவரது வீட்டில் காளீஸ்வரன் மகள் ஆதார்கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளது. இதனை வாங்குவதற்காக, காளீஸ்வரன் சென்றுள்ளார்.
ஆனால் மாமியார் வீட்டு பூட்டியிருந்தது.அதனால், காளீஸ்வரன் அந்த தெருவின் முனைக்கு வந்து நின்றுள்ளார்.
அப்போது, தருமபுரம் நெடுந்தெருவைச்சேர்ந்த பரமசிவம் (41) என்பவர் சென்றுள்ளார். தெருவின் ஓரம் நின்றுகொண்டிருந்த காளீஸ்வரனை பார்த்த்து, யார் நீ? ஏன் இங்கு நிற்கிறாய் என கேட்டுள்ளார்.
இதை கேட்பதற்கு நீ யார்? என காளீஸ்வரன் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபம் அடைந்த பரமசிவம், தனது இடுப்பில் வைத்திருத கத்தியால் காளீஸ்வரன் இடதுபக்க கழுத்தில் கிழித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதை பார்த்த தருமபுரம் பர்மா தெரிவைச்சேர்ந்த அலெக்ஸ் என்பவர் காளீஸ்வரனை காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். மருத்துவமனையில் காளீஸ்வவரன் கொடுத்த புகாரின் பேரில், காரைக்கால் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பரமசிவத்தை தேடி வருகின்றனர்.