உள்ளூர் செய்திகள்
நெல் விதைகளை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டார்.

அரசு விதை பண்ணை வயலில் கலெக்டர் ஆய்வு

Published On 2022-02-06 13:14 IST   |   Update On 2022-02-06 13:14:00 IST
வேதாரண்யத்தில் அரசு விதை பண்ணை வயலில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா குரவப்புலம் சிவரஞ்சனி பொறியியல் பட்டதாரி. இவரது கணவர் சரவணகுமார். சித்த மருத்துவர். கணவர் துணையோடு பிரியதர்ஷினி இந்தியாவில் உள்ள 1250 வகையான பாரம்பரியமிக்க நெல் விதைகளை சேகரித்து வருகிறார்.

இந்த ஆண்டு தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் இந்த பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட நெல் ரகங்களை சாகுபடி செய்துள்ளார். சிவரஞ்சனி சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார். 

சிவரஞ்சனி சேகரித்து வைத்துள்ள 1250 நெல் ரகங்களை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நெல்லின் தன்மை அதன் ரகம் சேமித்த விதம் கேட்டறிந்து நெல் வயலை பார்வையிட்டார். பெண் பொறியியல் பட்டதாரி சிவரஞ்சனியோடு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் 2 மணி நேரம் பார்வையிட்டு அவர் குடும்பத்துடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

இந்திய அரசின் உதவிகளை செய்வதாக சிவரஞ்சனிக்கு கலெக்டர் கூறியதோடு பாரம்பரிய நெல்லை மீட்டெடுத்ததை பாராட்டினார். நாகை வேளாண்மை இணை இயக்குனர் அகண்ட ராவ், துணை இயக்குனர் வெங்கடேசன், வேதாரண்யம் வேளாண்மை அலுவலர் நவீன்குமார், வேளாண்மை அலுவலர்கள் ஜெயபிரகாஷ், ஆறுமுகம், சிவானந்தம், மோகன் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Similar News