உள்ளூர் செய்திகள்
மின்சாரத்தில் சிக்கிய அரியவகை ஆந்தை

மின்சாரத்தில் சிக்கி உயிருக்கு போராடிய அரிய வகை ஆந்தை மீட்பு

Published On 2022-02-06 12:00 IST   |   Update On 2022-02-06 12:00:00 IST
மின்சாரத்தில் சிக்கி உயிருக்கு போராடிய அரிய வகை ஆந்தை மீட்கப்பட்டது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மலங்கன்குடியிருப்பு கிராமத்தைச்  சேர்ந்தவர் நடராஜன். இவரது வீட்டின் முன்பு உயரழுத்த மின்சாரம் செல்கிறது.

இதன் அருகே சுமார் 2 கிலோ எடையுள்ள அரிய வகை ஆந்தை ஒன்று, எதிர்பாராத விதமாக மின்சாரத்தில் சிக்கியது.இதில் அதன் இறக்கைகள் காயமடைந்து பறக்க முடியாமல் உயிருக்கு போராடிக்கொண்டிருந்து.
 
அப்போது அவ்வழியே சென்ற அதே கிராமத்தைச் சேர்ந்த நடராஜன், கார்த்திகேயன் ஆகியோர் ஆந்தையை பத்திரமாக மீட்டு, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தவனத்துறை அலுவலர் மனவாளன் ஆந்தையை மீட்டு அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளித்தார்.

பின்னர் ஆந்தையை அங்குள்ள வனப்பகுதியில்விட்டனர். மின்சாரத்தில் அடிபட்டு உயிருக்குப் போராடிய ஆந்தையை  பத்திரமாக மீட்ட இளைஞர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

Similar News