உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவ மாணவிகள் கோரிக்கை

கச்சிராயப்பாளையம் முதல் தாவடிபட்டு வரை கூடுதல் பஸ் இயக்க வேண்டும் - பள்ளி மாணவ மாணவிகள் கோரிக்கை

Published On 2022-02-05 18:39 IST   |   Update On 2022-02-05 18:39:00 IST
கச்சிராயப்பாளையம் முதல் தாவடிபட்டு வரை கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கச்சிராப்பாளையம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மேலும் தனியார் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. 

பள்ளிகளில் படிப்பதற்காக தாவடிபட்டு கரடிசித்தூர் செல்லம்பட்டு பால்ராம்பட்டு என சுற்றுப் புறங்களில் இருந்து சுமார் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கச்சிராயபாளையம் பள்ளிகளில் வந்து படித்து விட்டு செல்கின்றனர் அப்படி செல்லும் வகையில் கச்சிராயபாளையம் முதல் தாவடிப்பட்டு வரை காலை 8. 30 மன்னிக்கும் மாலை 4.30 மணிக்கம் பஸ் இயக்கப்படுகிறது.

இந்தப் பேருந்தில் தாவடிபட்டு கரடிசித்தூர் பால்ராம்பட்டு மாத்தூர் அம்மாபேட்டை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து மாணவ மாணவிகள் கச்சிராயபாளையம் பள்ளிக்கு வந்து படித்து விட்டு மாலை வீடு செல்கின்றனர் அப்படி அந்த பேருந்தில் செல்லும்போது மாலை நேரங்களில் பேருந்தில் கூட்ட நெரிசல் காரணமாக பேருந்துஅதிக அளவில் பள்ளி மாணவ மாணவிகள் பயணம் செய்கிறார்கள் இதனால் போதுமான இடவசதி இல்லாமல் பேருந்தின் படியில் தொங்கியபடி மாணவ மாணவிகள் ஆபத்தான நிலையில் பயணம் செய்கிறார்கள்ஆகையால் 4:30 மணிக்கு பஸ் எண் 31 செல்லும் அரசுப் பேருந்து கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News