உள்ளூர் செய்திகள்
தேர்தல் நடைபெறும் இடங்களை பார்வையாளர் ஆய்வு
திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் இடங்களை பார்வையாளர் ஆய்வு செய்தார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
2022-ன் தேர்தல் பார்வையாளராக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் ஆனந்த்மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் தொடர்பான விவரங்கள் மற்றும் புகார்கள் ஏதேனும் தெரிவிக்க விரும்பினால் அதனை திருவாரூர் மாவட்ட தேர்தல் பார்வையாளரின் கைப்பேசி எண்ணிற்கு (9360473093) தெரிவிக்கலாம் என கலெக்டரும்,
மாவட்ட தேர்தல் அலுவலருமான காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் இடங்களை பார்வையாளர் ஆனந்தபவன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.