உள்ளூர் செய்திகள்
குழந்தை உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து 1½ வயது குழந்தை உயிரிழப்பு

Published On 2022-02-05 11:49 IST   |   Update On 2022-02-05 11:49:00 IST
போச்சம்பள்ளி அருகே பெற்றோர் கண்முன்பே குழந்தை கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே ஜிம்மாண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 35), விவசாயி. இவரது மனைவி பாப்பாத்தி. இவர்களுக்கு ஹரீஷ் என்ற 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளான்.

இந்த நிலையில் அசோக்குமாரும், அவரது மனைவியும் நேற்று மாலை தங்களது நிலத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது ஹரீசையும் அழைத்து சென்றிருந்தனர்.

அப்போது ஹரீஷ், வரப்பில் ஓரமாக நின்று விளையாடி கொண்டிருந்தான். திடீரென அங்குள்ள கிணற்றில் ஹரீஷ் தவறி விழுந்தான். இதை கண்டு அவனது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். கிணற்று தண்ணீரில் குழந்தை மூழ்கியதால் உடனே போச்சம்பள்ளி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

பின்னர் கிணற்றில் மூழ்கி பலியான குழந்தை ஹரீசை பிணமாக மீட்டனர். ஹரீசின் உடலை பார்த்து அவனது பெற்றோரும், உறவினர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதது, காண்போரின் கண்களை குளமாக்கியது. பெற்றோர் கண்முன்பே, குழந்தை கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News