உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

அகதிகள் முகாமில் 10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்- வாலிபர் கைது

Published On 2022-02-05 10:55 IST   |   Update On 2022-02-05 10:55:00 IST
விருதுநகர் அகதிகள் முகாமில் 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கை செய்தனர்.
விருதுநகர்:

விருதுநகர் குல்லூர் சந்தையில் அகதிகள் முகாம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள 16 வயது சிறுமி தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரது பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது தெற்குப்பட்டி பாலவனத்தம் பகுதியை சேர்ந்த அச்சப்பன் (22) என்ற தொழிலாளி அங்கு வந்துள்ளார்.

அவர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது சிறுமியின் மாமா வந்துவிட்டதால், அச்சப்பன் தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தபோது பள்ளிக்கு செல்லும்போது அச்சப்பனுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் அவர் தன்னை மிரட்டி வீட்டில் இருக்கும்படி கூறியதாகவும் தற்போது திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி அச்சப்பன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Similar News