உள்ளூர் செய்திகள்
ராஜபாளையத்தில் மில் தொழிலாளி தற்கொலை
ராஜபாளையத்தில் மில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் முருகேசன் 62. இவரது மனைவி சண்முகத்தாய் இருவரும் மில்லில் வேலை செய்து வருகின்றனர் இவர்களுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் முருகேசனுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்றும் குணமாகாததால் மனமுடைந்த முருகேசன் நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலையில் இதுகுறித்து தெற்கு போலீஸ் நிலையத்திற்கு உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த இன்ஸ்பெக்டர் மன்னவன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.