உள்ளூர் செய்திகள்
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் திருக்கதவு திறக்க, அடைக்க பாடும் வரலாறு திருவிழா
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமகப் பெருவிழாவில் திருக்கதவு திறக்க, அடைக்க பாடும் வரலாறு திருவிழா இன்று மாலை நடக்கிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு உடையது.
வேதங்கள் பூஜைசெய்து மூடி கிடந்த கதவை அப்பரும் சம்பந்தரும் தேவாரம் பாடி திறந்ததாக வரலாற்று சிறப்புமிக்க கோவில் இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக பெருவிழா 20 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.
இந்த ஆண்டு மாசி மக பெருவிழா 29&1&2022 தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் வரலாற்று சிறப்புமிக்க திருவிழாவான மூடிக்கிடந்த கதவை அப்பரும் சம்பந்தரும் தேவாரப் பதிகங்கள் பாடி பிறந்த வரலாறு நிகழ்ச்சி இன்று 4-2-2022 மாலை நடைபெறுகிறது.
இந்த விழாவில் அப்பரும் சம்பந்தரும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கோவில் வெளிப் பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கொடி மரத்தடியில் நிறுத்தப்பட்டு மூடிக்கிடந்த கதவைத் திறக்கும் வரலாற்று திருவிழாவை யொட்டி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கதவை கபாட பூஜைகள் செய்து தேவார ஓதுவார்கள் தேவார பதிகங்களை பாட கதவு திறக்கப்படும்.
அப்போது சன்னதியில் தீபங்கள் ஏற்றப்பட்டு ஒளிமயமாக காட்சி அளிக்கும்.
இந்த கண்கொள்ளாக்காட்சியை பக்தர்கள் கண்டுகளிக்க கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர் அரசின் வழிகாட்டுதல் படி நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.