உள்ளூர் செய்திகள்
ராஜபாளையத்தில் மில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் முருகேசன்(வயது 62). இவர் அதே பகுதியில் உள்ள மில்லில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சண்முகத்தாய். இவரும் மில்தொழிலாளி.
இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. கடந்த சில நாட்களாக முருகேசனுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் குணமாகவில்லை.
இதனால் விரக்தியுடன் காணப்பட்ட முருகேசன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முருகேசன் தற்கொலை குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.