உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

புல் கட்டு கொண்டு சென்ற முதியவர் கால் தவறி கீழே விழுந்து சாவு

Published On 2022-02-04 14:59 IST   |   Update On 2022-02-04 14:59:00 IST
தக்கலை அருகே புல் கட்டு கொண்டு சென்ற முதியவர் கால் தவறி கீழே விழுந்து இறந்தார்.
தக்கலை:

தக்கலை அருகே வீரவிளை ஆழ்வார்கோவில் பகுதியை சேர்ந்த முதியவர்  கிருஷ்ணகுமார் (வயது 61).   இவர் சம்பவத்தன்று மாடுகளுக்கு புல் அறுத்து விட்டு வீட்டுக்கு வரும் போது வீரவிளை அருகில் கால் தடுக்கி கீழே விழுந்தார்.

கீழே விழுந்ததில் பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் உள்ளவர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இது சம்பந்தமாக அவரது மகன் மணிகண்டன் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News