உள்ளூர் செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் பலி

திருக்கோவிலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் பலி

Published On 2022-02-03 15:46 IST   |   Update On 2022-02-03 15:46:00 IST
திருக்கோவிலூர் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத நிலையில் கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் பலியானார்.
திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் அருகே உள்ள அம்மன்கொல்லை மேடு கிராமத்தைச் சேர்ந்த வர் கணபதி. இவரது மகள் விருத்தாம்பாள் (வயது 25). இவர் அதே ஊரில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத வகையில் அருகில் இருந்த தரை கிணற்றில் விழுந்து விட்டார். உயிர் பிழைக்க எவ்வளவோ போராடியும் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விருத்தாம்பாள் பிரேதத்தை கைப்பற்றி விசாரனை நடத்தி வருகின்றனர்.

Similar News