உள்ளூர் செய்திகள்
தேசிய கொடி ஏந்தியபடி ஊர்வலம் வந்த ராணுவ வீரர்.

ஓய்வு பெற்று ஊர் திரும்பிய ராணுவ வீரருக்கு வரவேற்பு

Published On 2022-02-03 15:31 IST   |   Update On 2022-02-03 15:31:00 IST
வேதாரண்யம் அருகே ஓய்வு பெற்று ஊர் திரும்பிய ராணுவ வீரரை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா தென்னடார் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் இந்திய ராணுவத்தில் 22 ஆண்டுகள் பணிபுரிந்தார். 

இந்நிலையில் பணி ஓய்வு பெற்று சொந்த ஊர் திரும்பிய முத்துக்குமாருக்கு தகட்டூர் கடை தெருவில் பொதுமக்கள் புடைசூழ முத்துகுமரன் கையில் தேசிய கொடி ஏந்தி மேள தாளங்கள் முழங்க தென்னடாருக்கு ஐந்து கிலோ மீட்டர் தூரம் இரு சக்கர வாகனம் முன் செல்ல ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். 

வழிநெடுகிலும் பொதுமக்கள் மாலை சால்வை அணிவித்து ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இந்த நிகழ்ச்சியில் நாகை, திருவாரூர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் நலச்சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் சிங்காரவேல், மாவட்டச் செயலாளர் இளங்கோவன், மாவட்ட பொருளாளர் விஜயகுமார், செயற்குழு உறுப்பினர் செல்வம், பிரபல ஜோதிட நிபுணர் பொதுவுடை மூர்த்தி, ஆசிரியர் பாஸ்கரன், தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் ஜெயகுமார், கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News