உள்ளூர் செய்திகள்
நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு.

வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு

Published On 2022-02-03 15:26 IST   |   Update On 2022-02-03 15:26:00 IST
நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் ஆழியூர், திருக் கண்ணங்குடி, பட்டமங்களம், இராதாமங்களம் ஆகிய ஊராட்சியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங் களை பார்வையிட்டு ஆய்வு செய்த பின் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடு கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளையும், 

வடக்காலத்தூர் ஊராட்சியில் ரூ.16.61 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 250 மீட்டர் தொலைவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், இலுப்பூர் ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம மந்திரி சாலை திட்டத்தின் கீழ் ரூ.297 லட்சம் மதிப்பீட்டில் 4360 மீட்டர் தொலைவில் சாலை அமைக்கும் பணியினையும், மற்றும் 23.20 லட்சம் மதிப்பீட்டில் 480 மீட்டர் தொலைவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினையும், 

தேவூர் ஊராட்சியில் ரூ.14.40 இலட்சம் மதிப்பீட்டில் 270 மீட்டர் தொலைவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் தேவூர் ஊராட்சி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Similar News