உள்ளூர் செய்திகள்
நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் மனிதநேய வார விழா
நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் மனிதநேய வார விழா நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரி வளாகத்தில் உள்ள அப்துல் காலம் அரங்கத்தில் மனிதநேய வார விழா நடைபெற்றது.
சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் சார்பில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் ராமு, காவல்துறை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ நிஜாமுதீன், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் தமிமுன் அன்சாரி மற்றும் ஊர்குடி தங்க பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கல்லூரி தலைவர் ஜோதிமணி அம்மாள், செயலாளர் முனைவர். பரமேஷ்வரன், அறக்கட்டளை உறுப்பினர் அருள் பிரகாசம், சங்கர் கணேஷ், இயக்குநர் த. விஜயசுந்தரம், தேர்வு நெறியாளர் முனைவர். சின்னதுறை, கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர்.நடராஜன், துணை முதல்வர். கலியபெருமாள், மற்றும் முனைவர் கற்பகம்
பாலிடெக்னிக் கல்லூரி துணை முதல்வர் தனசேகர், நாகூர் காவல் துணை ஆய்வாளர் ராஜேஷ், தமிழ் துறை கூடுதல் தலைவர் ரமேஷ், காதர் ஷா, அப்சர் மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இறுதியில் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.