உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ரேசன்கடை விற்பனையாளர் தற்காலிக பணி நீக்கம்

Published On 2022-02-02 16:08 IST   |   Update On 2022-02-02 16:08:00 IST
சீர்காழி அருகே பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வழங்காத ரேசன்கடை விற்பனையாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
சீர்காழி:

சீர்காழி அடுத்த சட்டநாதபுரம் ரேசன்கடை விற்பனையாளராக சக்கரவர்த்தி பணியாற்றி வருகிறார். 

சட்டநாதபுரம் ரேசன் கடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாக வழங்க தவறியதால் அங்கு சில தினங்களுக்கு முன்பு பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்நிலையில் செம்மங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் பொது வினியோகத்திட்ட உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி பொங்கல் பரிசு தொகுப்பினை முறையாக வழங்க தவறியது.

அன்றாட விற்பனை தொகையினை முறையாக சங்கத்தில் செலுத்த தவறிய காரணங் களை எடுத்துரைத்து விற்பனையாளர் சக்கர வர்த்தி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Similar News