உள்ளூர் செய்திகள்
நெல் கொள்முதல் நிலையத்தை ஒன்றிய குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் தொடக்கி வைத்தார்.

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

Published On 2022-02-01 15:39 IST   |   Update On 2022-02-01 16:01:00 IST
கொள்ளிடம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சோதியக்குடி கிராமத்தில் சம்பா அறுவடை செய்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் கலந்துகொண்டு புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து நெல் கொள்முதலை தொடக்கி வைத்தார்.

கொள்முதல் நிலைய ஊழியர் விஜயகாந்த் மற்றும் விவசாயிகள், ஊழியர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் கொண்ணகாட்டுபடுகை, கீரங்குடி, சிதம்பரநாதபுரம், ஆனந்தக்கூத்தன், சோதியக்குடி, சரஸ்வதிவிளாகம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்த சம்பா நெல் மூட்டைகளை சிரமமின்றி கொண்டு வந்து விற்பனை செய்யும் வகையில் இந்த நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது என்று ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தெரிவித்தார்.

Similar News